பான் ஏஷியா வங்கியின் புதிய டிஜிட்டல் வலயங்கள் பிலியந்தலையிலும், கடுவலையிலும் அங்குரார்ப்பணம்

10 Oct, 2024 | 04:32 PM
image

இன்றைய பரபரப்பான சமூகங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், பிலியந்தலையிலும், கடுவலையிலும் இரண்டு புதிய டிஜிட்டல் வலயங்களை அங்குரார்ப்பணம் செய்திருப்பதை பான் ஏஷியா வங்கி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த விரிவாக்கமானது நவீன வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்கும் நிதிச் சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் வங்கி மேற்கொண்டுள்ள ஆணித்தரமான உறுதிப்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாகும். 

வாடிக்கையாளர்கள் பரந்த அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மண்டலங்கள், தானியங்கிப் பரிவர்த்தனை இயந்திரங்கள் (ATM) மூலம் வாடிக்கையாளர்கள்  தங்கள் பரிவர்த்தனைகளை 24/7 அடிப்படையில் தடையின்றி, துரித கதியில் மேற்கொள்ள முடியும்.

அத்துடன் சிறப்பான கணக்கு முகாமைத்துவத்துக்கான ஸ்மார்ட் பேங்கிங் கணிப்பொறியகங்கள் (கியோஸ்க்) வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு டிஜிட்டல் வலயங்களிலும் வாடிக்கையாளர்கள் மென்மையான மற்றும் திறமையான வங்கி அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

பான் ஏஷியா வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க இந்த புதிய டிஜிட்டல் வலயங்கள் பற்றிக் கருத்து தெரிவிக்கையில்  “டிஜிட்டல் வங்கிச் சேவையின் எழுச்சியுடன் எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவது மிகவும் முக்கியமானது.

இந்த இரண்டு புதிய டிஜிட்டல் மண்டலங்களும் எளிதில் அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் புதுமையான வங்கி அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு மேலதிக சான்றாகும்" என்றார்.  

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் செயலாளருமான நயந்த பெர்னாண்டோ,   உதவிப் பொது முகாமையாளர் -வைப்புத் திரட்டல் புத்திக பெரேரா ஆகிய இருவரும் பான் ஏஷியா வங்கியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் சகிதம் கலந்துகொண்டனர்.

இந்த புதிய திறப்புகள் ஹோமாகம, பாணந்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் பல உட்பட நாடு முழுவதும் டிஜிட்டல் வலயங்களை நிர்மாணிப்பதற்கு பான் ஏஷியா வங்கி மேற்கொண்டுள்ள பரந்த அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும் ஒவ்வொரு டிஜிட்டல் மண்டலத்திலும், பான் ஏசியா வங்கி தனது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற புதுமையான வங்கித் தீர்வுகளை வழங்குவதற்கும் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துள்ளது.

படவிளக்கம் ; 

நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் செயலாளருமான நயந்த பெர்னாண்டோ,   உதவிப் பொது முகாமையாளர் - வைப்புத் திரட்டல் புத்திக பெரேரா ஆகிய இருவரும் பான் ஏஷியா வங்கியின் வாடிக்கையாளர்கள் சகிதம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையில் அறிமுகமான கையடக்க...

2025-02-13 15:57:06
news-image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி...

2025-02-13 13:03:25
news-image

சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S...

2025-02-12 16:03:43
news-image

தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற...

2025-02-12 12:46:29
news-image

Acuity Partners ஐ முழுமையாக கையகப்படுத்தி,...

2025-02-12 12:33:05
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08