இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.
போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மலிங்க போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மலிங்கவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல, வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மலிங்க கண்டுபிடித்து விட்டார் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM