நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 7

10 Oct, 2024 | 10:27 AM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்ற  வாகன விபத்துக்களில்  மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - வலப்பனை வீதியில்  இடம்பெற்ற விபத்தில்  சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன்,  சிறுமியொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த 7 வயதுடைய சிறுவன் மற்றும் 15 வயதுடைய சிறுமியின் மீது மோதி, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது,பலத்த காயமடைந்த இருவரில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வலப்பனை, முலஹல்கெலே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, பாதுக்க - தும்மோதர  வீதியில் தும்மோதரவிலிருந்து  பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தும்மோதர  பகுதியைச் சேர்ந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 53 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பு அவிசாவளை வீதியின் துன்னான பகுதியில்  அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் எதிர்திசையில்  பயணித்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹங்வல்ல பகுதியைச்  சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த விபத்துக்கள் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23