ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல் - இஸ்ரேலின் வடபகுதி நகரில் இருவர் பலி

10 Oct, 2024 | 06:10 AM
image

இஸ்ரேலின் வடபகுதி மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

 இஸ்ரேலின் வடபகுதியை நோக்கி 150க்கும் அதிகமான ரொக்கட்கள் ஏவப்பட்டதாக  இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 கிரியாட் ஸ்மோனா என்ற எல்லைபகுதி நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ரொக்கட் சிதறல்கள் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்தனர் பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன.

 ஹெஸ்புல்லா அமைப்பு இந்த நகரில் உள்ள இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது.கிரியாட் ஸ்மோனா நகரிலிருந்து இஸ்ரேல் பெருமளவிற்கு பொதுமக்களை வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதல் தீவிரமடைந்த பின்னர் இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டுள்ள முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரொக்கட் சிதறல்கள் காரணமாக இந்த நகரின் பல பகுதிகளில் தீ மூண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44