தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றிக்கு வரவேற்பினை பெற்றுக் கொடுப்பதற்கும்இ உலகவாழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பா-துகாப்பதற்காகவும் தியாகங்களைச் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சந்தர்ப்பமாகும்.
தற்போதைய நிலைக்கு இலங்கையை கொண்டு வருவதற்காக பல வருட காலமாக தொழிலாளர் வர்க்கத்தினர் முக்கிய பங்களிப்புச் செலுத்தியுள்ளனர். அதனால் எமது நாட்டின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியின் பொருட்டு தமது சக்தியை ஈடுபடுத்தி சேவையாற்றிய தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியினை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது நாடானது தற்போது வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தினை அடைந்துள்ளது. எனவே தேசிய அபிவிருத்திக்காக சிறப்புடன் பணியாற்றும் அதேவேளை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பவற்றினை அடைந்து கொள்வதற்காக உணர்ச்சிபூர்வமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறும் தொழிலாளர் வர்க்கத்திடம் வேண்டிக்கொள்ள நான் விரும்புகின்றேன்.
இறுதியாகஇ இந்நாளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம்இ வெற்றி மற்றும் அவர்கள் முகம்கொடுத்து வருகின்ற சவால்கள் என்பவற்றினை முன்னிலைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM