மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் காயம்

07 Oct, 2024 | 11:55 AM
image

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம பகுதியில் மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

காயமடைந்த சிறுவர்கள் இருவரும் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது, பட்டமானது வீதியில் உள்ள மின்கம்பத்தில் சிக்கியுள்ளது.

பின்னர், இரு சிறுவர்களும் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடிக்குச் சென்று அலுமினியம் கம்பி ஒன்றின் உதவியுடன் மின்கம்பத்தில் சிக்கியுள்ள பட்டத்தை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த இரு சிறுவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22