பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம பகுதியில் மின்சாரம் தாக்கி இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
காயமடைந்த சிறுவர்கள் இருவரும் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது, பட்டமானது வீதியில் உள்ள மின்கம்பத்தில் சிக்கியுள்ளது.
பின்னர், இரு சிறுவர்களும் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடிக்குச் சென்று அலுமினியம் கம்பி ஒன்றின் உதவியுடன் மின்கம்பத்தில் சிக்கியுள்ள பட்டத்தை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த இரு சிறுவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM