சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர் அவர்களுக்கு சு.க.வுடன் எவ்வித தொடர்பும் இல்லை - மஹிந்த அமரவீர!

06 Oct, 2024 | 07:19 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அம்பாந்தோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,   

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்ட குழுவினரே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கப் போவதாகக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் சுதந்திர கட்சியில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை.  

நாம் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளோம். அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் கூட்டணியில் போட்டியிடவுள்ளோம். 

விரைவில் எமது கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்யும். நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் பலப்படுத்தி உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34
news-image

சுற்றுலா விடுதியில் நபரொருவர் உயிர்மாய்ப்பு

2026-03-06 16:51:16
news-image

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?...

2026-03-06 16:12:39
news-image

இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...

2026-03-06 16:54:35