உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கின்றார் கர்தினால்

06 Oct, 2024 | 11:57 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று சந்தித்து உரையாடவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கத்துவாப்பிட்டிய தேவாலயத்தில் இன்று கர்தினால் சந்தித்து உரையாடவுள்ளார் .

புதிய அரசாங்கத்தின் நீதிதொடர்பாக இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ள கர்தினால் அரசாங்கத்தை சேர்ந்தவர்களுடன் சமீபத்தில் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிற்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

கர்தினால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்திக்கவுள்ளதை உறுதி செய்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பின் தலைவர் நிசாந்த மொகாந்திரம்  தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நியமித்த  ஆணைக்குழுக்கள் குறித்து எங்களிற்கு நம்பிக்கையில்லை, என தெரிவித்துள்ள அவர் எங்களிற்கு இன்னுமொரு குழு தேவையில்லை,புதிய அரசாங்கத்திடமிருந்து  வலுவான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து  அரசாங்கத்துடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை கர்தினால் இன்றைய சந்திப்பில்  பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வார் என நிசாந்த மொகாந்திரம் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கலந்துகொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02