16 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிவான் ராஜிந்த ஜயசூரிய நேற்று (03) உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான தேரர் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் பெற்றோரிடம் சிறுவனுக்குப் பரிகாரம் ஒன்று செய்ய வேண்டும் என கூறி சிறுவனைத் தனது அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
இதன்போது, இந்த சிறுவன் குறித்த அறையிலிருந்து தப்பிச் சென்று இது தொடர்பில் தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த உறவினர் இது தொடர்பில் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சிறுவனின் தாய் இது தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான தேரர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (03) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM