தெஹியோவிட்ட, தெபேகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெஹியோவிட்ட, தெபேகம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்யதுள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வாள்கள், இரண்டு கத்திகள் , வாள் தயாரிக்கும் வெள்ளை இரும்புத் தகடுகள் மற்றும் வாள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரின் வீட்டிற்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் செல்வதாக கூறப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அல்கொட மற்றும் முருத்தெட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM