இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் போது கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் சமுக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் அக்கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் எஸ்,ஜே.வி செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு காலை 09.30மணியளவில் மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதோடு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா,யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
நிகழ்வில் ஆசியுரையினை சிவஸ்ரீ சு.விநாயகமூர்த்தி குருக்ள் வழங்கவுள்ளதுடன் தலைமையுரையை பா.அரியநேத்திரனும் அறிமுகவுரையினை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தவுள்ளார்.
இதன்போது 'ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும்;; என்னும் தலைப்பில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளதுடன் 'தந்தை செல்வா' என்னும் தலைப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா உரையாற்றவுள்ளதுடன் சிறப்புரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்த்தவுள்மை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM