(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள், தூதரகங்களில் எமது நாட்டின் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான முழுமையான அறிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக தயாரிக்கப்படுகின்றன. குறித்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏனைய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் மீள அழைக்கப்பட மாட்டார்கள். தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. ஐ.நா.வுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் பீரிஸ் அங்கு உரையாற்றவுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களை மீள அழைப்பது பொறுத்தமானதாக இருக்காது.
எவ்வாறிருப்பினும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவற்றை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று தான் மத்திய வங்கி ஆளுனர் மற்றும் திறைசேறி செயலாளரும் பதவியில் நீடிக்கின்றனர். நாணய நிதியத்துடனான நேரடி பேச்சுவார்த்தைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அந்த பதவிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பவில்லை.
மேலும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் எமது அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர். இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மாறாக பிரதி அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள். கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இவற்றை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM