ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியின் கால்களைக் காணொளி எடுத்ததாகக் கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
பெலவத்தை இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான இராணுவ வீரர் கொழும்பிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கால்களை இரகசியமாக தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த பயணிகள் சிலர் குறித்த பல்கலை மாணவியிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ரயிலிலிருந்த பயணிகள் சிலர் இணைந்து சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற போது சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM