தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

30 Sep, 2024 | 02:05 PM
image

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.

பின்னர், பரீட்சையை மீள நடத்துவது குறித்துத் தீர்மானிப்பதற்காகக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என அக்குழு நேற்று (29) அறிவித்திருந்தது.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்குக் கசியப்பட்ட மூன்று வினாக்களுக்கான புள்ளிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அக்குழு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, பெற்றோர்கள் சிலர் ஒன்றிணைந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 15:18:46
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16
news-image

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கின

2026-07-19 14:43:09
news-image

மட்டக்களப்பில் குப்பை வண்டியில் அன்னதான பொருட்கள்?...

2026-07-19 15:00:40