அம்பலாங்கொடை, வத்துகெதர , ஆதாதொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்து அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பு ஒன்று பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பானது 18 அடி நீளமுடையது ஆகும்.
இந்த நாகப்பாம்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்த அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகமானது நாட்டில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறான அரியவகை நாகப்பாம்புகள் பிறக்கும்.
எனவே, இதனை வனப்பகுதியில் விட்டுவிடாமல் பாதுகாப்பாக தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
ஏனெனில், வனப்பகுதியில் உள்ள ஏனைய மிருகங்கள் இந்த அரியவகை நாகப்பாம்பை வேட்டையாடுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM