புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரணை

Published By: Digital Desk 7

30 Sep, 2024 | 10:37 AM
image

பெரிய நீலாவணையில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல்.நதீர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து, கைதான சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளையில் சந்தேக நபர்களை இன்று திங்கட்கிழமை (30) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

கைதான ஐவரும் 28 - 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு முதலான பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது...

2026-01-22 05:27:28
news-image

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப...

2026-01-22 05:14:08
news-image

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க...

2026-01-22 04:42:37
news-image

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு...

2026-01-22 04:33:09
news-image

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு-...

2026-01-22 04:30:48
news-image

7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்”...

2026-01-22 04:26:45
news-image

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க...

2026-01-22 04:20:55
news-image

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை...

2026-01-22 04:17:51
news-image

நிட்டம்புவையில் 61 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ...

2026-01-22 04:10:32
news-image

பேரனர்த்தப் பாதிப்புக்களை ஆராய இலங்கை வரும்...

2026-01-22 04:08:36
news-image

அம்பாறையில் கடலரிப்பு தீவிரம்: உடனடி அரச...

2026-01-22 04:01:17
news-image

மலையக மக்களுக்கு சொந்தமாக 10 பேர்ச்...

2026-01-22 03:56:52