வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதுடையவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,
எனது மனைவி கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவூதி அரேபியாவுக்கு சென்றார். அநுராதபுரத்தில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் சவூதிக்கு பயணம் செய்துள்ளார்.
சவூதிக்கு சென்ற நாளிலிருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை. கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை. இந்நிலையில் எனது மனைவி சில நாட்களாக என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடவில்லை.
நாம் முகவரை அணுகியபோது அவர் சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது.
தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே, அவரது உடலையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM