மஹிந்த, நாமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் - ரோஹித்த அபேகுணவர்தன

Published By: Vishnu

29 Sep, 2024 | 11:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொதுத்தேர்தலில் போட்டியிடும், கட்சி மற்றும் சின்னம் தொடர்பில் திங்கட்கிழமை (30) அறிவிப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதிக்கிறோம். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. ஏனெனில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானால், மக்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியில் இருப்பதொன்றும் எமக்கு புதிதல்ல, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தயாராகவுள்ளேன். களுத்துறை மாவட்ட மக்கள் என்னை  தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான தீர்மானத்தை இன்று அறிவிப்போம். பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42