பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “அங்கொடை ஜூலே” என்று அழைக்கப்படும் பொன்னம்பெருமகே தனுஷ் புத்திக்க என்பவரின் உதவியாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் முக்கிய உதவியாளரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான இவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 51 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 274,400 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM