பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பேலியகொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மற்றுமொரு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் களனி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
இந்த சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM