மொனராகலை - புத்தல வீதியில் ஹொரொம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதி பின்னர் பஸ் தரிப்பிடத்தில் இருந்த இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் தாயொருவர் மீது மோதி அருகிலிருந்த கடை ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, ஓரு முச்சக்கரவண்டியின் சாரதியும் இரு பாடசாலை மாணவர்களும் தாயொருவரும் காயமடைந்துள்ள நிலையில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் உடல் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM