மகாவலி ஆற்றில் நீராடச் சென்று காணாமற்போன இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

27 Sep, 2024 | 04:19 PM
image

பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு கீழ் மகாவலி ஆற்றில் நீராடச் சென்றவேளையில் காணாமற்போன இரு இளைஞர்களது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த 25ஆம் திகதி மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற ஐந்து இளைஞர்களில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயிருந்தனர். 

அதனையடுத்து, அந்த இருவரை தேடும் பணியில் வத்துகாமம் பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், காணாமற்போன இருவரில் ஒருவரது சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டுள்ளது.  

அதன் பின்னர், இன்று காலை மற்றைய இளைஞரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த இரு இளைஞர்களும் 19 மற்றும் 20 வயதுடைய வத்துகாமம் குன்னேபான பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர். 

உயிரிழந்தவர்களது உடல்கள் இன்று கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29