20இன் கீழ் AFC ஆசிய கிண்ண தகுதிகாண் (ஈ குழு): இலங்கைக்கு தொடரும் தோல்விகள்

Published By: Vishnu

27 Sep, 2024 | 12:22 AM
image

(நெவில் அன்தனி)

தஜிகிஸ்தானில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளன (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை இளைஞர் அணி மிக மோசமான தோல்விகளைத் தழுவியுள்ளது.

ஈ குழுவில் இடம்பெறும் இலங்கை தான் விளையாடிய 3 போட்டிகளில் எதிரணிகளுக்கு 12 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் இலங்கை சார்பாக ஒரு கோலும் போடப்படவில்லை.

இந்த மூன்று போட்டிகளிலும் ஒரு சிலரைத் தவிர மற்றையவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்ற போதிலும் அவர்களிடம் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.

அடுத்து சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதால் இலங்கை பயிற்றுநர் இராஜமணி தேவசகாயம், இதுவரை பார்வையாளர்களாக வீரர்கள் ஆசனத்தில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் ஆற்றல்களைப் பரீட்சிப்பாரேயானால் அது வரவேற்கத் தக்கதாக இருக்கும்.

கோல்காப்பாளர் அஹமத் ஷரீப் 12 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளதால் புதிய கோல் காப்பளாளர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து பயிற்றுநர் சிந்திப்பது நலம். வெறுமனே 22 வீரர்களை அழைத்துச் சென்று அவர்களில் சிலரை வெறும் பார்வையாளர்களாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவுடனான முதலாவது போட்டியில் 0 - 4 எனவும், தஜிகிஸ்தானுடான இரண்டாவது போட்டியில் 0 - 3 எனவும் தோல்வி அடைந்த இலங்கை, நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஓமானிடம் 0 - 5 என தோல்வி அடைந்தது.

தஜகிஸ்தானின் துஷன்பே, குடியரசு மத்திய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியின் முதலாவது பகுதியில் முழு ஆதிக்கம் செலுத்திய ஓமான், முதல் 38 நிமிடங்களில் 4 கோல்களைப் போட்டு இலங்கை அணியை திக்குமுக்காட வைத்தது.

போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ஓடே அல் மன்வாரி, 18ஆவது நிமிடத்தில் முஹாந்த் அல்-சாதி, 34ஆம், 38ஆம் நிமிடங்களில் யூசுவ் அலி அல் ஷபிபி ஆகியோர் கோல்களைப் போட்டு ஓமானை இடைவேளையின்போது 4 - 0 என முன்னிலையில் இட்டனர்.

இடைவேளைக்குப் பின்னர் போட்டியின் 56ஆவது நிமிடத்தில் பைஸால் அல் ஹாதிதி கோல் நிலையை 5 - 0 என ஓமானுக்கு  சார்பாக உயர்த்தினார்.

அதன் பின்னர் இலங்கை அணி தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதாலும் ஓமான் பிரதான வீரர்களை மாற்றியதாலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்படவில்லை.

இறுதியில் ஓமான் 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.

இலங்கை தனது கடைசிப் போட்டியில் மலேசியாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04