களுவாஞ்சிக்குடி - ஏத்தாளைக்குளம் காட்டுப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்! 

26 Sep, 2024 | 05:19 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது. 

ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் இருந்துவருகிறது. 

அப்பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதோடு, பாரிய சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தீ தற்செயலாக பரவியதா அல்லது திட்டமிட்ட செயற்பாடா என்பது தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், உண்மையை கண்டறியும் நோக்கில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:04:50
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59