இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (25) மாலை நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் கிளையில் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வெற்றிக் கொண்டாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வருகை தந்த பொதுமக்களுக்கு பால் சோறும் இனிப்பு பண்டங்களும் வழங்கி தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடினர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தொடர்ந்து உள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை முன் வைத்தனர்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் , ஆதரவாளர்கள், மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM