கொழும்பு, மாளிகாவத்தை ,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாளிகாவத்தை ,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தெஹிவளை சோல் பீச் விடுதியின் உரிமையாளரே காயமடைந்துள்ளார்.
மேலும்,துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM