நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார்.
இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76% ) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் இருந்தார்.
ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க 2,299,767 ( 17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், எவரும் 50 சதவீதமான வாக்குகளைப் பெறாத நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நிலை ஏற்பட்டது.
இந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து விருப்பு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற்று இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் விருப்பு வாக்கில் அகில இலங்கை ரீதியாக சஜித் பிரேமதாஸவுக்கு 167,867 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 105, 264 வாக்குகளும் கிடைத்தன.
இறுதியில் 5,634,915 முதல் சுற்று வாக்குகளுடன் 105,183 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 5,740,098 (55.87%) வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
சஜித் பிரேமதாஸ 4,363,035 முதல் சுற்றுவாக்குகளுடன் 170,867 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 4,533,902 (44.13% ) வாக்குகளைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM