மிரிஹானையில் பெண் படுகொலை ; சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 2

23 Sep, 2024 | 10:34 AM
image

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தானம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெஹிரிவத்தை, சந்தானம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டில் சாரதியாக கடமையாற்றும் நபரொருவரால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெந்தர கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள  முயன்ற போது கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புஹுல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17