தலவாக்கலையில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

20 Sep, 2024 | 03:13 PM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த ந.கனகேஸ்வரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்தார். 

இதன்போது, அவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர் குளவிகள் கொட்டியதால் பயத்தினால் மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15