முப்படைகள் பங்கேற்பில் பாடசாலைகளில் டெங்கு குறித்து ஆய்வு: அமைச்சர் ராஜித சேனாரத்ன

Published By: Devika

26 Apr, 2017 | 11:12 AM
image

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் சுற்றுச்சூழல் சுத்தமாகப் பேணப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“நுளம்புகள் பெருகி வருவதால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவி வருகின்றன. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

“பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றின் சுகாதாரத் தரம் குறித்து அறிவதற்காக நாளை மறுதினம் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில், பாடசாலைகளில் ஆய்வு நடத்துமாறு டெங்கு தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“இந்த ஆய்வில், டெங்கு தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி, சுகாதார அதிகாரிகள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். விடுமுறைக் காலத்தில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பழைய மாணவர்களின் பங்கேற்பில் பெரும்பாலான பாடசாலைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. என்றபோதும், அவை நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் உள்ளனவா என்று இந்தக் குழு ஆராயும்.

“போதுமான சுகாதார நடவடிக்கைகளைப் பேணாத பாடசாலைகளுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னரும் எதுவித முன்னேற்றமும் இல்லையென்று அறியப்பட்டால் பாடசாலை அதிபரை குற்றவாளியாக இனங்காணப்பட்டு விசாரணைக்கு முகங்கொடுக்க நேரும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45