வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக பயன்படுத்த வேண்டும் - நிரோஸ்

18 Sep, 2024 | 04:11 PM
image

விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் இருக்கக் கூடிய வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தினை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக நாம் பயன்படுத்தவேண்டுமே தவிர அதனை அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக போலி உத்தரவாதம் தரும் பேரினவாதிகளுக்கு இரையாக்கக் கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.  

சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து புண்டத்தரிப்பு சாந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,       

தமிழ்த் தேசியம் இன்று தேசிய நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளவர்களாலேயே பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத்தில் பயணிப்போர் சிலர் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிய  வேட்பாளர்களுக்கு ஆதரவாக இங்கே மேடை ஏறுகின்றனர்.  

அப்படியாக அகச் சவால்கள், சோதனைகள் நிறைந்த ஓர் தேர்தலாக இம் முறைய தேர்தல் எம் முன் வந்து நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் என்பது பொரும் உழல்வாதிகள், அரசியல் பலம் பொருந்தியவர்களை எதிர்த்து போட்டியிடுகின்ற விடயமாகும். 

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் நாம் கொள்கை இலட்சியங்கள் எனப் பயணிக்கையில் தேர்தல் என்றால் பெருந்தொகை நிதி வேண்டும்.  

அது வேண்டும் இது வேண்டும் என இன்றும் எமது மண்ணில் தமிழ்த் தேசியம் பேசும் பலரும் பேரினவாத வேட்பாளர்களுக்கு சேவகம் செய்கின்றனர். 

பேரினவாதச் சிந்தனை உடைய அடிப்படையில் அரசியல் தீர்வு விடயத்தில் சாதாரணமாக இருக்கக் கூடிய தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்குக் கூட உத்தரவாதமற்ற நிலைமைகளுக்குள் சில தமிழ்த் தலைவர்கள் சிக்கியுள்ளனர்.   

தம் விழுந்தது மாத்திரமல்லாது எமது மக்களையும் வீழ்த்தி ஒப்பந்த அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். நாம் யுத்தத்தின் பின்னர் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினோம். 

அதில் மைத்திரிபால சிறிசேன போன்றோர் எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். அவர்கள் எல்லோரும் இனவாதத்தினையும் தமிழருக்கான மனிதாபிமான முன்னேற்றங்களில் கூட எம்மை ஏமாற்றியவர்கள். 

இன்று தென்னிலங்கையின் வேட்பாளர்களை ஆதரிக்கக் கூறுபவர்கள் எந்தவித உத்தரவாதமும் இன்றியே எமது மக்களை வழிநடத்தப்பார்க்கின்றனர்.

இந் நிலையில் எமது மக்கள் இலட்சிய வழியில் கொள்கை வழியில் முடிவினை எடுத்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54