முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 4 நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் டெல்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் தினகரனின் நண்பரான பெங்களூருவைச் சேர்ந்த மல்லிகார்ஜுனும் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.50 கோடி பேரம் பேசி ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 4 நாட்களில் தினகரனிடம் டெல்லி போலீஸார் சுமார் 37 மணி நேரம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.1.30 கோடி பணத்துடன் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனை டெல்லி காவல்துறை தற்போது விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது.
தினகரனை கைது செய்துள்ள டெல்லி போலீஸ் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM