நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு கொண்டுசெல்வதா? மக்கள் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் - ஐ.தே.க. சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார

Published By: Digital Desk 7

17 Sep, 2024 | 09:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதாரத்தை முன்னேற்றி, நாட்டை அபிவிருத்தி செய்துவரும் தற்போதைய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மக்கள் சரியான தீர்மானம் எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து, தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த நாட்டுக்கான தலைவரை தெரிவு செய்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது.

அதனால் பொருளாதாரத்தை முன்னேற்றி, நாட்டை அபிவிருத்தி செய்துவரும் தற்போதைய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நாட்டை மீ்ண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்ல இடமளிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் சரியான தீர்மானம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே செய்ய முடியுமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி இரண்டு முறை ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த குழுவாகும்.

அவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்து, மூன்று மாதங்களில் ஆட்சியை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்போது, மக்கள் அமைதியை இழந்து செயற்பட முற்படும்போது அவர்கள் ஆயுதத்தால்தான் நாட்டை நிர்வகிக்க முற்படுவார்கள்.

அதனால் மக்கள் விடுதலை முன்னணி ஆயுத முனையில் நாட்டை நிர்வகிப்பதற்கு விருப்பம் என்றால், அவர்களுக்கு வாக்களிக்க முடியும். ஏனெனில் தங்களின் ஆட்சிக்கு எதிராக அடக்குமுறைகள் ஏற்படும்போது அரச அதிகாரம் இராணுவ அதிகாரம் மற்றும் தங்களின் கட்சி அதிகாரத்தை பயன்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் லால்காந்த தெரிவித்திருக்கிறார். அதனால் அனுரகுமாரவை அதிகாரத்துக்கு கொண்டுவந்து ஆயுத முனையில் மக்களை நிர்வகிப்பதை யாரும் அனுமதிக்கப்போவதில்லை.

அதேபோன்று குடும்ப ஆட்சியும் இந்த நாட்டில் தற்போது மக்களால் வெறுக்கப்பட்டதொன்றாகும். சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் குடும்ப ஆட்சியே ஏற்படும். ஏனெனில் சஜித் பிரேமதாச தனது தாய் ஹேமா பிரேமதாச, தனது மனைவி, சகோதரி மற்றும் தனது நண்பன் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோர் சொல்வதை மாத்திரமே அவர் கேட்பார். அதனால் சஜித் வெற்றிபெற்றால் மீ்ண்டும் குடும்ப ஆட்சியே ஏற்படும்.

அதனால் தற்போதுள்ள வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் மாத்திரமே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் நாட்டில் நிம்மதியாக வாழமுடியுமான சூழல் ஏற்படும்.  நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உறுப்பினர்களில்...

2025-01-17 16:15:35
news-image

அம்பாந்தோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப்...

2025-01-17 15:55:50
news-image

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல் போயிருந்த 4...

2025-01-17 16:13:21
news-image

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன்...

2025-01-17 15:48:49
news-image

கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-17 15:25:50
news-image

கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர...

2025-01-17 15:19:31
news-image

தடம் புரள்வு ; மலையக மார்க்கத்தில்...

2025-01-17 15:29:36
news-image

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

2025-01-17 15:34:44
news-image

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை...

2025-01-17 15:05:10
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி...

2025-01-17 14:50:19
news-image

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள்...

2025-01-17 14:49:52
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிகள் ,...

2025-01-17 14:42:27