கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியில் 17 கிராம் 890 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 14 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மோதரை தொடர்மாடி குடியிருப்பு பகுதியிலிருந்து 10 கிராம் 670 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு - 15 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலிருந்து 11 கிராம் 211 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM