bestweb

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனது ஆட்சியில் கைதுசெய்யப்படுவர் - சஜித் உறுதி : சாணக்கியன் ஆதரவு

16 Sep, 2024 | 06:21 PM
image

ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள். இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். 

அவரது கூற்றை வழிமொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் காணி திருடர்கள், சட்டவிரோத மணல் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள் மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட, தொகுதி, பிரதேச, கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி, மகளிர் அணியுடனான விசேட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.  

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவித்தார்.   

இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வினையும் இவ்வாறான கொலையாளிகள், கள்வர்கள் மற்றும் சாணக்கியன் தெரிவித்த, முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என்பதோடு இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.  

களுதாவளை விளையாட்டு மைதானத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் சென்ற சஜித் பிரேமதாசவை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் வரவேற்று, பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதன் பின்னரே களுவாஞ்சிக்குடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,     

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும், அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான தீர்வினையும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரி மற்றும் அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது நடவடிக்கையினையும் நிறைவேற்றி  நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும்.  

வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்டவிரோத மணல் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விஷமிகள் கைது செய்யப்பட வேண்டும்.  

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்றிருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுத்திட்ட வேலைகளும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்றார்.    

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட, தொகுதி, மத்திய, பிரதேச, கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிர் அணி பிரதிநிதிகள், தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16