கோட்டாபய , ரணில் ஆகியோர் நிறுத்திய வீடமைப்புத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம் ; சஜித் பிரேமதாச!

16 Sep, 2024 | 11:20 AM
image

நான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தேன். கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த உடனே அவற்றை நிறுத்தியதோடு, ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியும் கோட்டாபயவின் அடித்தளத்தில் சென்று அந்த வீடமைப்புத் திட்டங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். 

தான் ஜனாதிபதியானவுடன் அந்த வீடமைப்புத் திட்டங்களை மீளவும் ஆரம்பித்து கம் உதாவ திட்டத்தை செயற்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

மட்டக்களப்பில்   நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 59 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,    

பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணிகள் தற்பொழுது காடாகியிருக்கின்றது. அந்தக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுப்பதோடு, யானை மனித மோதலுக்கும் நடவடிக்கை எடுப்போம்.    

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு, 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராமுள்ள ஒரு மூடை உரத்தை வழங்குவோம். 

தொழில் இல்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்போம்.   

அத்தோடு யுவதிகளை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தி திட்டத்திற்கும் அடித்தளமிடுவோம். இன, மத, குல பேதங்களின்றி முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் செயற்பாடுகளையும் முன்னெடுப்போம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16