நாடு நெருக்கடியிலிருந்தபோது எதிரணியில் இருந்தவர்களெல்லாம் ஆட்சியை பொறுப்பேற்காது பயந்தோடினர் - ரணிலின் பிரச்சார கூட்டத்தில் எம்.ராமேஸ்வரன்

Published By: Vishnu

16 Sep, 2024 | 12:16 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும். செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த எதிர்பார்ப்பு ஈடேறும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, நுவரெலியா மாநகரில் 15.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்  ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திசாநயக்க, நிமல் பியதிஸ்ஸ, மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றும் போதே மருதபாண்டி ராமேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ நாடு நெருக்கடியில் இருந்தபோது எதிரணியில் இருந்தவர்களெல்லாம் ஆட்சியை பொறுப்பேற்காது பயந்தோடினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக முன்வந்து சவாலை ஏற்றார். குறுகிய காலப்பகுதிக்குள் அவர் நாட்டை மீட்டெடுத்துள்ளார்.

மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் சேவையை வழங்கியுள்ளார். இன்று வரிசைகள் இல்லை. அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகளால் கூட சுதந்திரமாக அரசியல் செய்யமுடிகின்றது. மின்வெட்டு இல்லை, எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை.

எனவேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து ஆள வேண்டும் என வடக்க, கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு என நாட்டில் வாழும் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்ப்பார்ப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி நிறைவேறும். 22 ஆம் திகதி ஆகும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக இருப்பார். மீண்டும் ரணில், வேண்டும் ரணில் என நாம் பிரச்சாரம் செய்துவருகின்றோம்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56