நல்லடக்கமா, எரிப்பா என்ற பிரச்சினை எழுந்தபோது ஐ.ம.ச மாத்திரமே வீதிக்கிறங்கி போராடியது - அக்கரைப்பற்றில் சஜித்

15 Sep, 2024 | 06:42 PM
image

முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் மத உரிமைக்காக அன்று ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது. ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்ற பிரச்சினையின்போது தேசியத் தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்ற ரணிலும் அநுரவும் அந்த மோசமான கொள்கைக்கு எதிராக குரல் எழுப்ப முடியுமாக இருந்தபோதிலும் அவர்கள் அதற்காக முன்வரவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் அன்றைய பிழையான கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே வீதிக்கிறங்கி போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அக்கரைப்பற்று நகரில் நேற்று சனிக்கிழமை (14) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 56ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

அன்றைய சந்தர்ப்பத்தில் கோட்டாபய ராஜபக்ச செய்த இந்த விடயங்களை சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுமதித்தார்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரும் இன மத பேதங்களை மறந்து இனவாதத்தை, மதவாதத்தை துறந்து அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழும் வகையில் நாட்டை வலுப்படுத்தி ஐக்கியப்படுத்துவோம். மக்களின் உரிமைகளை பாதுகாப்போம். 

அத்தோடு விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை வழங்கி  குறைந்த தொகையில் குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம். இதற்கு மேலதிகமாக மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம்.  

மேலும் வறுமை அதிகரித்து காணப்படுகின்றமையால் நாட்டு மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனவே வறுமையை ஒழிப்பதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அதனூடாக வரிய குடும்பம் ஒன்றுக்கு 24 மாதங்களுக்கு மாதம் ஒன்று தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கி வறுமையை போக்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுப்போம்.  

தாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். அத்தோடு சர்வதேச தரத்திலான இளைஞர் மத்திய நிலையங்களை உருவாக்கி அதன் ஊடாக இளம் தலைமுறையினருக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழிக்கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு என்பவற்றை பெற்றுக்கொண்டு சிறந்த தேர்ச்சியையும் ஆளுமையையும் விருத்தி செய்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்துவோம்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-17 15:25:50
news-image

கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர...

2025-01-17 15:19:31
news-image

தடம் புரள்வு ; மலையக மார்க்கத்தில்...

2025-01-17 15:29:36
news-image

கடற்படைத் தளபதி சபாநாயகரைச் சந்தித்தார்

2025-01-17 15:34:44
news-image

அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை...

2025-01-17 15:05:10
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க அனுமதி...

2025-01-17 14:50:19
news-image

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள்...

2025-01-17 14:49:52
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிகள் ,...

2025-01-17 14:42:27
news-image

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது...

2025-01-17 14:41:13
news-image

பொலன்னறுவை - தூபாராம பிரதிமை மண்டபத்தைப்...

2025-01-17 14:20:36
news-image

சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

2025-01-17 14:02:15
news-image

மட்டக்களப்பில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம்...

2025-01-17 14:02:02