மீனவர்களின் தேவை கருதி நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தை அமைத்துக் கொடுப்போம் - சஜித் பிரேமதாச

15 Sep, 2024 | 07:25 PM
image

ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை.  

அன்று கோட்டாபய ராஜபக்ச கடைபிடித்த மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிறங்கியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

கல்முனையில் நேற்று சனிக்கிழமை (15) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 54 ஆவது மக்கள் வெற்றி பேரணியில்   கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்துதன்மை ஆகிய இந்த மூன்று அனர்த்தங்களினாலும் நாட்டு மக்கள் இன்று அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.  

இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வறியவர்களாக மாறி இருக்கின்றார்கள். ஏழ்மை அடைந்துள்ளனர்.  

இந்த வறுமையை போக்குவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குகின்ற வேலைத்திட்டமல்ல.  

மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு ஐந்து வேலைத்திட்டங்களின் ஊடாக மாதாந்த 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவோம்.   

விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக 5000 ரூபாவுக்கு உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவ சமூகத்திற்கு நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம்.  

அத்தோடு மீனவர்களுக்கு தேவையான நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தையும் அமைத்துக் கொடுப்பதோடு, சகல வசதிகளோடும் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவோம்.  

அனைத்து பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த கல்வியை பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம் என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37