அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை பிரசாரம் : அமைதியான சூழலை குழப்ப வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை !

15 Sep, 2024 | 09:52 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்) 

ஜனாதிபதி தேர்தலுக்கான அமைதியான சூழலே நாட்டில் உள்ளது. வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்ற வன்முறை சூழல்களை எடுத்து கூறி இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழலை குழப்பும் நோக்கில் யாரும் செயல்பட கூடாது என கோரிக்கை விடுத்த இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் நலன்களை அடையவும் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கிலும் சிலர் அநாவசியமான பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தது.   

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் புதன்கிழமையுடன் வேட்பாளர்களின் பிரச்சார கூட்டங்கள் நிறைவுப்பெறுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் குறிப்பிடுகையில், 

2024 ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு கடைமைகளுக்காக சுமார் 70 ஆயிரம் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடை படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தை நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தா விடினும் வழமை போல நாடளாவிய ரீதியில் இராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அமைதியானதும் சுதந்திரமானதுமான வாக்களிப்புக்கான சூழல் நாட்டில் உள்ளது. 

எனவே ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்றே கருதுகின்றோம். ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலுமே வன்முறைக்கான சூழல் தூண்டப்படுகின்றது. அவற்றை கண்காணித்து வருகின்றோம். இல்லாத விடயத்தை ஏன் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று தெரிய வில்லை. வன்முறைகளை உருவாக்க வேண்டாம் என்றே அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம். 

பொது மக்களுக்கு தேர்தல் குறித்தும் தேசிய அரசியல் மற்றும் வாக்களிக்கு தொடர்பிலும் போதிய அறிவற்றல் உள்ளது. இதன் பிரகாரம்  எதிர்வரும் சனிக்கிழமை மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று ஜனாதிபதி தெரிவுக்கான தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவார்கள். அத்தகைய அமைதியான  சூழலே நாட்டில் உள்ளது. வௌ;வேறு நாடுகளில் இடம்பெற்ற வன்முறை சூழல்களை எடுத்து காட்டி இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழலை குழப்பும்  நோக்கில் சிலர் கருத்துக்களை கூறிவருகின்றனர். 

இதனூடாக அரசியல் நலன்களை அடையவும் மக்கள் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கிலுமே இவ்வாறான கருத்துக்களை பரப்புவர்களின் நோக்கமாக உள்ளது என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-05-25 06:26:58
news-image

அடுத்த ஆண்டு இந்த நாளில் மக்களால்...

2025-05-24 21:03:01
news-image

சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் ;...

2025-05-24 21:02:42
news-image

நெக்ஸ்ட் தொழிற்சாலையின் ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பதே...

2025-05-24 21:02:12
news-image

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ...

2025-05-24 13:09:56
news-image

16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா...

2025-05-24 13:07:58
news-image

9 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின்...

2025-05-24 16:35:47
news-image

நீர்கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப...

2025-05-24 17:15:54
news-image

பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட...

2025-05-24 16:05:09
news-image

நல்லூர் ஆலயசூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல்...

2025-05-24 16:58:03
news-image

உணவக உரிமையாளர் வெட்டி கொலை ;...

2025-05-24 15:33:48
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-05-24 15:15:55