சஜித்தை ஆதரித்து மட்டக்களப்பில் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் பிணையில் விடுதலை 

14 Sep, 2024 | 08:14 PM
image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் இரவு வேளையில் சுவரொட்டிகளை   ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று சனிக்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்  நேற்று வெள்ளிக்கிழமை (13) நள்ளிரவு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாமாங்கம் பகுதியில் வீதியிலுள்ள மின்சார தூண்கள் மற்றும் சுவர்களில் இருவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்துள்ளனர். 

அதனையடுத்து, இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41