கொலை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பிலும் ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பிலும் சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்திலும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திலும் இரு வழக்குகள் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM