புலமைப்பரிசில் நிறைவடைந்ததும் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுங்கள் - விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன்

Published By: Digital Desk 2

14 Sep, 2024 | 01:51 PM
image

நாளை 15 ஆம் திகதி நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்ததும் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் பெற்றோர்களிடம் விசேட வைத்திய நிபுணர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்து பார்ப்பதில் பலனில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று எனவும், வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் , புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58
news-image

நுவரெலியா - கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள...

2025-12-06 13:06:38
news-image

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு :...

2025-12-06 13:35:19