ஹொரணை ஹொரகெட்டிய பிரதேசத்தில் 05 கிலோ 620 கிராம் அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இந்த அம்பர் தொகையை ஒரு கிலோ தலா 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து இந்த அம்பர் தொகையைக் கொள்வனவு செய்யும் போர்வையில் ஹொரணை ஹொரகெட்டிய பிரதேசத்திற்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட அம்பர் தொகையின் மொத்த பெறுமதி 03 கோடி ரூபா ஆகும்.
இந்த அம்பர் தொகையானது திருகோணமலை பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடமிருந்து கிடைத்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM