புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் - சர்வதேச நாணய நிதியம்

13 Sep, 2024 | 02:23 PM
image

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று மக்கள் விருப்பத்துடன் புதிய அரசாங்கம் அமையப்பெற்ற பின்னர் தனது திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு தயார் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளன எனினும் இலங்கை தனது பொருளாதார நெருக்;கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்காக இந்த முன்னேற்றத்தை பாதுகாப்பது அவசியம் என சர்வதேச நாணயநிதியத்தின் தகவல் தொடர்புதுறை இயக்குநர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளபடி ஈஎவ்எவ் திட்டம் தொடர்பான கடன்பேண்தகுதன்மை மதிப்பீட்டை மீள்பரிசீலனை செய்ய அல்லது மீளாய்வு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால தேர்தலை பொறுத்தவரை அதனை இலங்கை மக்களே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் பார்வையிலிருந்து பார்க்கும் போது இந்த திட்டம் குறிப்பிடத்தக்க விடயங்களை சாதித்துள்ளதாக கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த திட்டத்தை பாதுகாப்பது அவசியம்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் மூன்றாவது மறுஆய்வு குறித்து பேசுவோம்,எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தெரிவை அடிப்படையான முடிவின் பின்னர் நாங்கள் அதனுடன் இணைந்து செல்ல தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16