களுத்துறை, அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் சிலர் நிறுத்த முயன்ற போது முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி தொடர்ந்து முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இந்த முச்சக்கரவண்டியை துரத்திச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 10,050 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM