தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

11 Sep, 2024 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவடைகிறது. தகுதிப் பெற்றுள்ளவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க வேண்டும். இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை அரச சேவையாளர்களில்  712,321 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தனர்.

திட்டமிட்ட வகையில் தபால்மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவடையும். 22 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் பிரிவுகளில் இருந்து பாரதூரமான முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பு செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.  இந்த மூன்று நாட்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு 11ஆம் திகதி இன்றும், 12ஆம் திகதி நாளையும் வாக்களிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

தபால்மூல வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நாளையுடன் நிறைடைகிறது. இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆணைக்குழு புதிதாக ஒன்றும் குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்புக்கு இம்முறை  736, 586 பேர் விண்ணப்பிருத்திருந்த நிலையில் 24,286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய இம்முறை 712,  321 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48
news-image

விபத்தில் சிக்கி தாயும் குழந்தையும் பரிதாபமாக...

2025-12-17 16:53:34
news-image

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி...

2025-12-17 16:50:28
news-image

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில்...

2025-12-17 17:08:08
news-image

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர்...

2025-12-17 16:32:52
news-image

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின்...

2025-12-17 16:11:48
news-image

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது...

2025-12-17 15:13:40
news-image

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள்...

2025-12-17 16:16:58
news-image

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை...

2025-12-17 16:11:19