ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் மதுசாரம், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளில் திருப்தியில்லை - ADIC நிறுவனம் 

09 Sep, 2024 | 04:18 PM
image

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியில்லை என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் வெளியிட்டு செய்தியறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

09வது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞான ரீதியான அடிப்படையில் 12 பரிந்துரைகள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி  மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் இம்முறை போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முனவைக்கப்பட்டது. 

தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 06.09.2024 வரை வெளியிட்ட விஞ்ஞாபனங்களில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்ற விஞ்ஞாபனப் பகுப்பாய்வை எமது நிறுவனம் மேற்கொண்டது. அப்பகுப்பாய்வானது கீழ்காணும் அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எமது அவதானிப்பின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் புகையிலை, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்காக உள்ளடக்கியிருக்கின்ற பரிந்துரைகள் தொடர்பாக இன்னமும் மகிழ்ச்சியடைய முடியாது. எனினும், சில வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் இவை தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் பாராட்டப்படவேண்டியவையே. 

எமது நாட்டில் பிரதான பிரச்சினையாக அமையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதானது, பொது மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் உட்பட சூழல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

ஆகவே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்ளைகளுடன் இப்பரிந்துரைகளையும் இணைத்துக்கொள்வார்கள் என நாம் நம்புகின்றோம். 

மேலும், இம்முறை தேர்தலினூடாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தி நாட்டில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக விரைந்து செயற்படுவார் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்பார்க்கிறது என்றுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் நீதிமன்றில்...

2025-06-18 16:15:58
news-image

4 வயது மகளை கொடூரமாக தாக்கி...

2025-06-18 15:32:41
news-image

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர்...

2025-06-18 16:08:36
news-image

வலி. கிழக்கு தவிசாளராக நிரோஸ் தெரிவு

2025-06-18 16:19:08
news-image

இந்த ஆண்டு நாட்டில் 100 ஆரம்ப...

2025-06-18 14:54:14
news-image

சபாநாயகரை சந்தித்தனர் நேபாள பாராளுமன்ற தூதுக்...

2025-06-18 16:06:24
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர்...

2025-06-18 15:43:49
news-image

கடற்கரைகளில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்த...

2025-06-18 15:50:10
news-image

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து ;...

2025-06-18 15:33:17
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்...

2025-06-18 14:22:44
news-image

தையிட்டி விகாரை விவகாரம்,  செம்மணி புதைகுழி,...

2025-06-18 14:43:13
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இந்தியா சென்ற...

2025-06-18 15:01:51