கல்கிஸ்ஸ மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹார வீதிப் பகுதியில், ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 45 வயதுடைய கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இவரிடமிருந்து 07 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்புர பகுதியில் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) மட்டக்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM