வெவ்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, தலங்கம - தலவத்துகொட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைதான இந்த நபர் 33 வயதுடைய அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் லேன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
அவரிடம் இருந்து 12 கிராம் 550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுத்துறை சிறைச்சாலைக்கு அருகில் போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், 05 கிராம் கஞ்சா, 17 புகையிலை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
கைதான நபர் மோதர மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை மேம்பாலத்துக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 11 கிராம் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்து, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படபொத பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த நபர் மடல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனித ஜோசப் மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரிடமிருந்து 11 கிராம் 840 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வாள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொத்தடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிகமுல்ல பகுதியிலும் இசுறு என்கிற இடத்திலும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை (07) கொத்தடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொத்தடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் 41 மற்றும் 55 வயதுடைய மாணிகமுல்ல மற்றும் அங்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த இருவரில் ஒருவரிடமிருந்து 10 கிராம் 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றவரிடம் இருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொத்தடுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM